நம் வாழ்வில் நம்மை அறியாமலே நிறைய தவறு நடக்கும்

இறைவன் நமக்கு நிறைய குழந்தை கொடுத்தாலும், ஒரு குழந்தை போதும் என நிறுத்துவது, கர்ப்பத்தை கால சூழ்நிலை சரி வராமல் கலைப்பது, தேவையே இல்லாமல் பிறர் மன வேதனைக்கு ஆளாக்குவது, செய்ய வேண்டிய பல விதமான செயல்கள் நாம் செய்யாமல் இருப்பது……

முன்னோர்களுக்கு திதி செய்வது இல்லை…

குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய வேத சடங்குகளை செய்யாமல் இருப்பது……

வேத வழி நடவாமல் இருப்பது…..

பெரியோர்களை துவேசிப்பது….

வேறு வழி இல்லாமல் காலத்துக்கு ஏற்றார் போல் மாறி, தன்னை மாற்றிக் கொண்டு நடப்பது…….. இப்படி நிறைய தவறு நடக்கும்.

இதனால் பாபங்களும் தோசங்களும் சாபங்களும் ஏற்பட்டு…..

இதனால் ஒரு இனம் புரியாத கவலை…..

எதிலும் தடை…..

எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காதது……

சந்தோசம் என்பதே இல்லாமல் போவது…….

என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பது போன்ற நிலை ஏற்ப்படும்

இதற்க்கு எளிமையான முறையில் ஒரு சிவ மந்திரம் சொல்றேன்

மந்திரம்

ஜயதே ஜகந்நாத  ஜயசங்கர சாத்வத

ஜயசர்வ ஜகந்நாத  ஜயசங்கர  சாத்வத

ஜயசர்வ ஸாரா ராதய ஜயசர்வ  ஸீரார்ஸீத

ஜயநித்ய நிராதார ஜயவிச்யம் பர அவ்வய

ஜயவிக்ன வகவந்தயே ச ஜய நாகேந்து பூஷன

ஜய கெளரிபதே சம்போ ஜய நித்ய நிரஞ்சன

ஜயநாத  க்ருபா ஸிந்தோ ஜய பத்தார்த்தி பஞ்சனி

ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகார உத்தாரண ப்ரபோ

இந்த மந்திரத்தை பிரதோஷ காலத்தில் சிவன் ஆலயத்தில் கூறினால்…..

நம் முன்னோர்கள் வழிபட்டதெய்வம் அங்கே வரும்…..

அன்றுமுதல் குடும்பம் தொழில் வாழ்க்கை முன்னேற்றம் ஏற்ப்பட ஆரம்பிக்கும்.

இதை கோயிலில் அமர்ந்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை சாமி பார்க்க வரிசையில் நிற்க்கும் போது சொல்லிக் கொண்டே போகலாம்

குலதெய்வம் தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் வழிபட வழி இயலாதவர்கள் இவர்களுக்கு அருள் கிடைக்கும் முறையில் இது ஒன்று.